Connect with us

ஆப்கானுக்கு எதிரான கடைசி டி 20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

ஆப்கானுக்கு எதிரான கடைசி டி 20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மல்லுக்கட்ட உள்ளது.

இதில் மொஹாலியில் உள்ள மைதானத்தில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தூபேவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2nd வது போட்டியிலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் விளையாடும் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி வெறும் 6 ரன்களை கடந்தால் டி20 தொடரில் அதிக ரன்களை எடுத்த பெருமையை விராட் கோலி பெறுவார்.

இதுமட்டுமின்றி டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த தொடருக்கு தயாராக இந்த தொடர் மிகவும் உதவும் எனபதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Featured

To Top