Connect with us

இளையராஜாவை சந்தித்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

Featured

இளையராஜாவை சந்தித்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

இசை உலகின் ஜாம்பவானாக இருப்பவர் இளையராஜா. 47 ஆண்டுகளாக அவரது இசையால் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். கடின உழைப்பால் இன்னும் இசை உலகின் ராஜாவாக வலம் வருகிறார்.

இந்த மாதம் 8ஆம் தேதி, லண்டனில் அவரது முதல் சிம்பொனியைக் காட்சியிட உள்ளார். இதற்காக பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர், நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து, ஆசி பெற்று வாழ்த்து தெரிவித்தார். 35 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த சிம்பொனியை, லண்டனில் அரங்கேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இது ஆசியாவில் யாரும் செய்யாத ஒரு சாதனையாக இருக்கக் கூடும்.

மேலும், சிவகார்த்திகேயன், இளையராஜாவிற்கு யாழ் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top