Connect with us

சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளரை பதம் பார்த்த ஹர்திக்..!!

Featured

சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளரை பதம் பார்த்த ஹர்திக்..!!

சையத் முஸ்தக் அலி கோப்பை டி20 தொடரில் சென்னை அணியின் புதிய பந்துவீச்சாளரை ஹர்திக் பாண்டியா பதம் பார்த்த சம்பவம் செம வைரலாகி வருகிறது.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் சையத் முஸ்தக் அலி கோப்பை டி20 தொடரில், தமிழ்நாடு அணிக்காக விளையாடும் குர்ஜப்நீத் சிங்-ன் ஒரு ஓவரில் 6,6,6,6,4 என பரோடா வீரர் ஹர்திக் பாண்ட்யா பொளந்து காட்டியுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு வீரர் விஜய் சங்கர், பாண்ட்யா வீசிய ஒரு ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டது இணையத்தில் பேசு பொருளாகியிருந்தது.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், சென்னை – மும்பை அணி வீரர்களின் ஆட்டம் தற்போதே பேசு பொருளாகியிருப்பது, ஐபிஎல் ரசிகர்களுக்குத் தீனி போடுவதாக அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதீப் ரங்கநாதன் சம்பள உயர்வு: கோலிவுட்டில் வேகமாக உயர்கிற இளம் நட்சத்திரம்! 🔥

More in Featured

To Top