Connect with us

ஜீவா படத்திற்கு வந்த சோதனை – பயங்கர சண்டையில் ஈடுபட்ட ரசிகர்கள்

Cinema News

ஜீவா படத்திற்கு வந்த சோதனை – பயங்கர சண்டையில் ஈடுபட்ட ரசிகர்கள்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையாமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள யாத்ரா-2 படம் நேற்று வெளியான நிலையில் அப்படி காண வந்த ரசிகர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘யாத்ரா’.

ராகவா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக யாத்ரா 2-ம் பாகம் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சொன்னது சொன்னபடி தற்போது ‘யாத்ரா-2’ திரைப்படம் உருவாகி உள்ளது . இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து தற்போது ஆந்திர முதலமைச்சர் ஆகிருப்பது வரை நடந்த சம்பவங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது .

இந்த படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று கோலாகலமாக வெளியானது.

இதையடுத்து இப்படத்திற்கு அனைவரும் நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில் யாத்ரா 2 பாகத்தை பார்க்க வந்த பவன் கல்யாண் ரசிகர்கள், திரையரங்களில் தேவையில்லாத வாங்குவதில் ஈடுபட்டனர்.

அப்போது ஜெகன் மோகன் ரெட்டி தரப்பினர் பவன் கல்யாண் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான வீடியோவும் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top