Connect with us

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிப்பு..!!

Featured

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீடிப்பு..!!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் நீட்டித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறிருப்பதாவது :

கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு. தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Featured

To Top