Connect with us

தீவிர சிகிச்சை பிரிவில் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் அனுமதி – பதற்றத்தில் குடும்பத்தினர்..!!

Featured

தீவிர சிகிச்சை பிரிவில் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் அனுமதி – பதற்றத்தில் குடும்பத்தினர்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணிக்காக பல முறை பல சிக்ஸர்களை பரவிட்டவர் கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் . 32 வயதான இவர் தற்போது ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அந்தவகையில் நடப்பு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ரஞ்சி கோப்பை போட்டியில் பிப்ரவரி 2-ம் தேதி சூரத் நகரில் நடைபெற உள்ள போட்டியில் ரயில்வே அணியை மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணி எதிர்கொள்ள உள்ளது .

இந்நிலையில் இந்த போட்டிக்காக கர்நாடக அணி வீரர்கள் அகர்தலாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுள்ளனர் . அப்போது மயங்க் அகர்வாலுக்கு வாய் மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தண்ணீர் என கருதி விமானத்தில் வைக்கப்பட்டு இருந்த கிருமி நாசினியை அவர் பருகியதாக தெரிகிறது. அதை முழுவதுமாக துப்பிய பிறகு வாய் பகுதியில் எரிச்சல் இருப்பதாக தெரிவித்த காரணத்தால் மருத்துவ சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் .

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கிப்பட்டுள்ள அவரை மருவத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

மயங்க் அகர்வாலின் இந்த நிலையை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை கீர்த்தி சுரேஷ் Cute போட்டோஷூட் Viral..

More in Featured

To Top