Connect with us

தமிழகத்தில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா : ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று உறுதி..!!

Featured

தமிழகத்தில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா : ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று உறுதி..!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தமிழக மக்கள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

உலக மக்கள் அனைவரையும் கடந்த 4 வருடங்களாக படாதபாடு படுத்திய கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் இருந்து முதன் முதலில் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.அங்கு தொடங்கிய அந்த தொற்று படிப்படியாக பரவி கோடான கோடி மக்களை வேட்டையாடியது.

உலக நாடுகளை நடுங்கவைத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்காமல் அங்கேயும் தலைவிரித்தாடியது இங்கும் பல உயிர்களை கொன்று குவித்த இந்த பெருந்தொற்று இந்த வருடம் சற்று பம்மி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலை காட்டி வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தமிழக மக்கள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  SRH அணிக்கு கடின இலக்கை கொடுக்குமா RCB..? RCB டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!!!

More in Featured

To Top