Connect with us

வாய் விட்டு மாட்டிக்கொண்ட நடிகை குஷ்பூ – வெளுத்து வாங்கும் காங்கிரஸ் கட்சி..!!

Featured

வாய் விட்டு மாட்டிக்கொண்ட நடிகை குஷ்பூ – வெளுத்து வாங்கும் காங்கிரஸ் கட்சி..!!

த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசித்தற்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பூவுக்கு இணையவாசி ஒருவர் அவரது கருத்தை பதிவிட அந்த கருத்திற்கு மிகவும் கறாராக பதிலடியை குஷ்பூ கொடுத்திருந்தார் அதில் ஒரு குறிப்பிட்ட இன மக்களை குஷ்பூ தாழ்த்தி பேசிவிட்டதாக கூறி பலரும் கடும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில் காங்கிரஸ் கட்சியும் குஷ்பூவுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிவுயா குறித்து அவகுடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கலும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்பை தெரிவித்தன.

இந்நிலையில், ட்விட்டர் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பறிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பூ, “திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும் மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது” என்று குறிப்பிட்டிருத்தார்.

சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவாதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார் குப்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத்துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பூ. நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்ட போது இந்த குஷ்பூ, எங்கே போயிருந்தார்? பாஜகவின் கே.டி.ராகவன் என்ற தலைவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசிய போது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? பாஜகயில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது இந்த குஷ்பூ வங்கே போயிருந்தார்? மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது இந்த குன்பூ எங்கே போயிருந்தார்?

குஷ்பூவுக்கு மகளிர் நலன் மீது எல்லாம் சிறிதளவும் அக்கறை கிடையாது. தன் பதவி தக்க வைக்க வேண்டும் என்பது தான் குஷ்பூவின் நோக்கம். சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும் போ மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதை தான் பயன்படுத்தினாராம்.

திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு. சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதல்வரை சுற்றி இறுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இது தான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பூ கபட நாடகமாடுகிறார்? இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை.

See also  உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத்தை வீழ்த்துமா பெங்களூரு..? டாஸ் வென்ற RCB பந்துவீச முடிவு ..!!

சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்பூலின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பூ நீக்க வேண்டும். அதோடு அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்றும். இல்லையென்றால் , லட்சக்கணக்கான
பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top