Connect with us

என்ன ஆனாலும் திமிராய் இரு..காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும் – அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்த சேரன்..!!

Cinema News

என்ன ஆனாலும் திமிராய் இரு..காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும் – அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்த சேரன்..!!

திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும் என இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இயக்குனர் சேரன்.

பருத்திவீரன் படம் தொடர்பாக கடந்த 17 வருடங்களாக இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது சர்ச்சைக்குரிய வகையில் பேசிஇருந்தார். இதற்கு சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, சுதா கொங்கரா,பொன்வண்ணன், கவிஞர் சினேகன் உள்பட திரையுலகை சார்ந்த பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இயக்குனர் சேரனும் அமீருக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன் கூறியதாவது :

அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு…. காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும் .. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்.

படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் ஞானவேல் ராஜாஅமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்கவேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் சேரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top