Connect with us

பயிற்சிக்காக சென்னைக்கு வந்ததடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

Featured

பயிற்சிக்காக சென்னைக்கு வந்ததடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பயிற்சியை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் இன்று சென்னையில் வந்திறங்கி உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது .

அதன்படி நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியில் பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் ஆயுத்தமாகி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட அணைத்து அணிகளும் பயிற்சினை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பயிற்சியை மேற்கொள்ள தற்போது சென்னை வந்ததடைந்துள்ளது.

சென்னை அணியின் நட்சத்திர வீரான ருத்ராஜ் உளப்பட பல இளம் வீரர்கள் இன்று சென்னை வந்துள்ள நிலையில் தங்களது பயிற்சியினை இனிதே தொடங்கி உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை பவித்ரா லட்சுமியின் Latest போட்டோஷூட்..

More in Featured

To Top