Connect with us

பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி தொடுத்த வழக்கு ரத்து

Snehan_Jayalakshmi

Cinema News

பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி தொடுத்த வழக்கு ரத்து

பிரபல பாடலாசிரியர் சினேகன் மீது நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாடலாசிரியர் சினேகன் தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி ஜெயலட்சுமி பணம் வசூலித்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து, சினேகன் தன்மீது அவதூறு பரப்பி வருவதாக மற்றொரு புகாரை சென்னை காவல் ஆணையரகத்தில் நடிகை ஜெயலட்சுமி சமர்ப்பித்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.

எனினும், சென்னை காவல் ஆணையரகத்தில் மீண்டும் புகார் அளித்த ஜெயலட்சுமி சினேகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் திருமங்கலம் காவல் நிலையத்தில் சினேகன் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நேற்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலட்சுமி மீது தான் அளித்த புகாருக்கு எதிராக வேண்டுமென்றே அவர் பொய் புகார் கொடுத்ததாக சினேகன் தரப்பு முன்வைத்த வாதத்தை ஏற்று நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் அரண்மனை 4 - இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top