Connect with us

அரசியலில் களமிறங்க திட்டம்..? நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கை

Actor_Vishal

Cinema News

அரசியலில் களமிறங்க திட்டம்..? நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கை

நடிகர் விஜயைத் தொடர்ந்து நடிகர் சங்க தலைவராக உள்ள விஷாலும் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரே இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்தார். இவர் முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நற்பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதேபோல், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நற்பணி இயக்கம் என பெயர் மாற்றி மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். இதனால் விஜயை பின்பற்றில் 2026 தேர்தலில் விஷாலும் களமிறங்க உள்ளார் என தகவல் பரபரப்பாக பரவத் தொடங்கியது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள விஷால், வரும் காலத்தில் தேவைப்பட்டால் மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு:-

சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

See also  தாய் மண்ணில் அதிரடி காட்டிய டெல்லி அணி - மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு..!!

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top