Connect with us

முட்டை குழம்பிற்காக காதலியை கொடூரமாக கொன்ற காதலன் – ஹரியானாவில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..!!

Featured

முட்டை குழம்பிற்காக காதலியை கொடூரமாக கொன்ற காதலன் – ஹரியானாவில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..!!

ஹரியானாவில் முட்டை குழம்பு கேட்டு செய்து தர மறுத்த ஆசை காதலியை கொடூரமாக கொலை செய்த காதலனின் வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவின் குருகிராம் பகுதியில் லாலன் யாதவ் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர் .

35 வயதாகும் லாலன் யாதவ் ஏற்கனவே திருமணமானவர் இவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவர் அஞ்சலி என்ற பெண்ணுடன் குருகிராம் பகுதியில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.

மது போதைக்கு அடிமையான இவர் தினமும் போதை தலைக்கேறும் அளவிற்கு குடிப்பவர் என்று கூறப்படுகிறித்து . இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் லாலன் யாதவ் செம போதையில் தனது அஞ்சலியிடம் முட்டை குழம்பு சமைத்துக் கொடுக்குமாறு ஆசையாக கேட்டுள்ளார்.

ஆனால் அஞ்சலி முட்டை குழப்பு செய்து தர மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த காதலன் லாலன் யாதவ் சுத்தியல் மற்றும் பெல்ட்டால் ஆசை காதலை அஞ்சலியை கொடூரமாக தாக்கிக் கொன்றுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஞ்சலி அங்கேயே துடிதுடித்து இறந்துள்ளார் .இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஞ்சலியின் உடலை மீது உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போதையில் கிடந்த லாலன் யாதவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க - 'அரண்மனை-4' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

More in Featured

To Top