Connect with us

மற்றோரு முக்கிய தலைவரை பாஜகவில் இருந்து தூக்கிய எடப்பாடி..யார் தெரியுமா??

Politics

மற்றோரு முக்கிய தலைவரை பாஜகவில் இருந்து தூக்கிய எடப்பாடி..யார் தெரியுமா??

பாஜக மாநில ஓபிசி அணியின் துணை தலைவராக அசோக்குமார் பதவி வகித்து வந்தார்…இவருக்கு அங்கு நல்ல ஒரு மதிப்பு இருக்கின்றது…முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சவுந்தரத்தின் மகனான அசோக்குமார் தற்போதைய மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார்…

பாஜக- அதிமுக கூட்டணி இருந்த நிலையில் ஈரோடு லோக்சபா தொகுதியை மருமகன் அசோக்குமாருக்கு பெற்றுத் தர வேண்டும் என்பதில் எம்.எல்.ஏ.சரஸ்வதி முயற்சித்து வந்தார் என்று அப்போது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது…அதன் பின் அந்த பேச்சு அதிகம் இல்லாமல் இருந்தது…

மருமகன் அசோக்குமார் பாஜகவில் ஓபிசி அணி துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்…இப்படி இருந்த அவருக்கு ஒரு புதிய பதவி வந்துள்ளது..தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது பாஜகவுடன் கூட்டணியே இல்லை என தீர்க்கமாக சொல்லவும் பட்டது..

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டு இருக்கின்றார்..இது பாஜக கட்சிக்கு பெரிய அடியாக தான் பார்க்க படுகின்றது..இப்படி பலர் அங்கிருந்து இங்கும் – இங்கிருந்து அங்கும் மாறி மாறி வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெயில் தாங்க முடியாத 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தாருங்கள் - வானதி சீனிவாசன் கோரிக்கை

More in Politics

To Top