Connect with us

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் வீட்டில் இருந்து வெளியேற பெண் போட்டியாளர் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் வீட்டில் இருந்து வெளியேற பெண் போட்டியாளர் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் அணைத்து மொழிகளில் ஒளிபரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ் . நாடு முழுவதும் அமோக வரவேற்பை இந்த நிகழ்ச்சி தமிழும் தொடங்கபட்டு வெற்றிகரமாக 7 சீசன்களை கடந்து தற்போது 8 ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

7 சீசன்கள் வரை இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் 8 சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் அழகான , கரடு முரடான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி ரவீந்தர், சச்சனா, தர்ஷா குப்தா, ரஞ்சித், தீபக், பவித்ரா ஜனனி, சத்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த சீசன் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளேயே ஒரு பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அந்த ப்ரோமோவில் வீட்டின் இளம் பெண் போட்டியாளராக களமிறங்கிய சச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கட்டப்பட்டுள்ளது .

இந்த எவிக்ஷன் காரணம் என்ன என்பது தற்போது வரை சரியாக தெரியவில்லை என்றாலும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விறுவிறுப்பு, அதிரடி காட்டவே பிக்பாஸ் குழு இப்படி செய்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி – சசிகுமார் நெகிழ்ச்சி..

More in Cinema News

To Top