Connect with us

திருமணம் முடிந்த கையோடு மோதப்போகும் அஷோக் செல்வன் – கீர்த்தி…ஏன் இப்படி!

Cinema News

திருமணம் முடிந்த கையோடு மோதப்போகும் அஷோக் செல்வன் – கீர்த்தி…ஏன் இப்படி!

திருமணத்துக்கு பின்னர் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்….அவர் அவர் அவர்களது பயணத்தில் பிஸியாக இருக்கின்றனர்.

அதன்படி அசோக் செல்வன் நடிப்பில் தற்போது சபா நாயகன் என்கிற திரைப்படம் தயாராகி இருக்கின்றது…சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்…இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது…அதனுடைய பாடல் கூட நேற்று வந்திருந்தது…

இதேபோல் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணகி படமும் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது…இப்படத்தை யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார் கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன்….

இது ஒரு A சான்றிதழ் பெற்ற படமாகும்…ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்ட்ரி நிறுவனம் வாங்கி உள்ளது…இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கின்றது…

இதில் என்ன பிரச்சனை என்றால் கண்ணகி படமும் வருகிற டிசம்பர் 15-ந் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது…திருமணமாகி மூன்றே மாதத்தில் அஷோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் ஜோடி பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொள்ள உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது….

ஆனால் இதனை அவர்கள் ஜாலியாக தான் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்…இது இரண்டும் வேறு வேறு கதை பேசப்படும் என சொல்லப்படுகிறது..எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top