Connect with us

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி தவித்த அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..!!

Featured

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி தவித்த அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..!!

உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் அந்த சுரங்கப் பாதைக்கான வழி முற்றிலும் அடைக்கப்பட்டது.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் சுரங்கத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர் . இந்நிலையில் கடந்த 17 நாட்களாக தேசிய மீட்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர் .

இந்நிலையில் மீட்பு குழுவினர் சுரங்கப்பாதைகுள் பலமணி நேரம் போராடி துளையிடும் பணியை முடித்ததை அடித்து சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கியது . சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளாளர்களை இன்று எப்படியாவது மீட்க வேண்டும் என முழு வீச்சில் பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் தற்போது வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 17 நாட்களாக கடுமையாக போராடி தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தற்போது தொழிலாளர்கள் அனைவரும் 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் அனைவரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

More in Featured

To Top