Connect with us

“தன்மானத்தை உயிரை விட பெரிதாக கருதியவர்! விஜயகாந்த் மறைவு குறித்து நடிகை ராதிகா வெளியிட்ட உருக்கமான பதிவு!”

Cinema News

“தன்மானத்தை உயிரை விட பெரிதாக கருதியவர்! விஜயகாந்த் மறைவு குறித்து நடிகை ராதிகா வெளியிட்ட உருக்கமான பதிவு!”

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த் என நடிகை ராதிகா சரத்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, “திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்.

அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர். விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன். தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர். சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர்.

அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது. அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள். விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது. அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

இந்த நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்துக்கு அளித்த உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன். ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன். You have done your best Viji, RIP” இவ்வாறு ராதிகா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

More in Cinema News

To Top