Connect with us

நடிகை கங்கனா கன்னத்தில் பளார் விட்ட சிஐஎஸ்எப் பெண் காவலர் – ஆதரவு தெரிவித்த சேரன்..!!

Cinema News

நடிகை கங்கனா கன்னத்தில் பளார் விட்ட சிஐஎஸ்எப் பெண் காவலர் – ஆதரவு தெரிவித்த சேரன்..!!

சண்டிகர் விமான நிலையில் நடிகை கங்கனா கன்னத்தில் பளார் விட்ட சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இயக்குநரும் நடிகருமான சேரனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா அமோக வெற்றி பெற்றார் .

இந்நிலையில் டெல்லி செல்ல சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த பாஜக எம்பி நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்ததால் அறைந்ததாக விசாரணையில் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கங்கனா கன்னத்தில் பளார் விட்ட சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இயக்குநரும் நடிகருமான சேரனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன் கூறியதாவது :

இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.. என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யாவின் தரமான பிறந்தநாள் பரிசு - ‘கங்குவா’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top