Connect with us

2024ல் இலங்கை தீவே காணாமல் போகும் நடிகரின் பேச்சால் சர்ச்சை!

Cinema News

2024ல் இலங்கை தீவே காணாமல் போகும் நடிகரின் பேச்சால் சர்ச்சை!

கோவையில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்தவர் தான் அனு மோகன்.இவரின் நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தது… காமெடி,குணச்சித்திர வேடம் என அனைத்தையும் செய்தவர் இவர்..அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரின் முகம் பரிட்சயம்…

1980களில் இயக்குனராக அறிமுகமான இவர் இது ஒரு தொடர் கதை,நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்…இப்படி இயக்குனர் அவதாரத்தையும் சிறப்பாக செய்தார்…அதோடு அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக, மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்…அதில் இவர் முக்கிய ரோல் செய்து இருப்பார்..

படம் நடிப்பு,இயக்கம் ஆகியவற்றை தாண்டி சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார்…அவை ஆன்மிகத்தில் அடங்கும் என்றும் சொல்லலாம்…அவர் 31.12.2024க்குள் ஒரு பெரிய அழிவு வரும் அதில் இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும் இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது…என்ற ஒரு தகவல் சொல்லி அதிகம் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றார்..

மேலும் சுனாமி காரணமாக சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.இது மக்களுக்கு முன் எச்சரிக்கை என பீதியை கிளப்பி இருக்கின்றார்..

அதேபோல் இவர் இந்தியா 2023 உலகப் கோப்பையை கைப்பற்றும் என்றார் ஆனால் அது நடக்கவில்லை..இப்படி இவர் சொல்லியது நடக்கவில்லை இதை ஏன் நம்ப வேண்டும் என பலரும் விமர்சித்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top