Connect with us

கதையே இல்லாமல் பான் இந்தியா ஸ்டாரா? – லோகேஷ் மீது பாக்யராஜ் விமர்சனம்!

bhakkiyaraj

Cinema News

கதையே இல்லாமல் பான் இந்தியா ஸ்டாரா? – லோகேஷ் மீது பாக்யராஜ் விமர்சனம்!

Lokesh- Bhakkiyaraj: தமிழ் திரையுலகை கடந்த சில வருடங்களாக பான் இந்தியா என்கிற புதிய புயல் ஆட்டம் காட்டி வருகிறது. ஒரு படம் இந்தியா முழுக்க பேசப்படவேண்டும் என்ற ஆசையில், பல இயக்குநர்கள் வெவ்வேறு மொழிகளிலிருந்து நடிகர்களை ஒன்றாக இணைத்து பான்இந்தியா கனவு காண்கிறார்கள். ஆனால், அந்த கனவை நனவாக்கும் அடித்தளமாக இருக்க வேண்டியது கதையே. அதுதான் தற்போதைய விவாதத்தின் மையமாகி இருக்கிறது.

“கூலி” – எதிர்பார்ப்பு மலை, முடிவு பள்ளம்!

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்த “கூலி” படம், இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. லோகேஷ் வரைந்த முன்னைய ஹிட் வரிசை — கார்த்தியுடன் கைதி, விஜயுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம் — ஆகியவை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தன. இதனால், ரஜினியுடன் அவர் இணைவது என்றால் அது “அடுத்த லெஜெண்ட்” என்று அனைவரும் நம்பினர்.

ஆனால் எதிர்பார்ப்பை மிஞ்சிய அளவுக்கு பஜெட் போட்டு, பான் இந்தியா ஸ்டார்களாக நாகார்ஜுனா (தெலுங்கு), உபேந்திரா (கன்னட), அமீர் கான் (ஹிந்தி) ஆகியோரை இணைத்தும் படம் ரசிகர்களை கவர முடியவில்லை.திரையரங்குகளில் இருந்து மக்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர். “படத்தில் பான் இந்தியா ஸ்டார்கள்தான் இருந்தார்கள், ஆனால் பான் இந்தியா கதை இல்லை” என்று விமர்சனங்கள் எழுந்தன.

பாக்யராஜின் நேரடி தாக்கு!

இந்த நிலைமையில், திரைக்கதை மன்னர் என போற்றப்படும் இயக்குநர் பாக்யராஜ், பேட்டியில் தன் கருத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறிய வார்த்தைகள் பலரது மனதையும் சிந்திக்க வைத்திருக்கிறது:

இலக்கணத்தை மீற வேண்டுமென்றால், முதலில் இலக்கணத்தை தெரிந்திருக்கணும். இப்போது எல்லாரும் பான் இந்தியா என்று சொல்லிக்கொண்டு படங்களை எடுக்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தை வந்ததால்தான் படம் பான் இந்தியா ஆகாது.

ஒரு கதையில் துல்லியம் இல்லாமல், வெறும் பல மொழி நடிகர்களை சேர்த்தால் அதுவே ஒரு பான் இந்தியா படம் ஆகாது. அந்த ஊரிலிருந்து அவரை, இந்த ஊரிலிருந்து இவரை கூப்பிட்டால் ரசிகர்கள் தானாக வருவார்கள் என்று நினைத்தால் அது பெரிய தவறுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அந்த நடிகர்களுக்கு பொருந்தும் ஆழம் கொடுக்க வேண்டும். “கூலியில் கதையே இல்லை”

பாக்யராஜ் மேலும் கூறியதாவது:

கதையே இல்லாமல் பான் இந்தியா படம் எடுத்தோ, கோடி கோடியாக பட்ஜெட் போட்டோ என்ன பயன்? கதை தான் உயிர். கதை இல்லாத படம் எந்த அளவுக்கு ஸ்டார்களை வைத்தாலும் தோல்வி தான்.

அமீர் கான் கூட கூலி படத்துக்குப் பிறகு தனிப்பட்ட அளவில் ‘இது எனக்கு சரியான முடிவு இல்லை’ என்று வருந்தியதாக கேட்டிருக்கிறேன். அதை வெளியில் சொல்ல மாட்டார்கள்;

பாக்யராஜ் வார்த்தைகளின் தாக்கம்

பாக்யராஜின் இந்த கருத்து லோகேஷ் ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. சிலர் “அவர் சரியாக சொல்கிறார், கதையில்லாமல் பான் இந்தியா என்ற பெயரில் படங்கள் எடுக்க முடியாது” என்று ஆதரிக்க, மற்றொருபக்கம், “லோகி மீண்டும் எழுந்து நிற்பார்” என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top