Connect with us

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சிறுமியின் பெற்றோருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்..!!

Featured

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சிறுமியின் பெற்றோருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்..!!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சோலை நகரில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி கடந்த 4 நாட்கள் முன்பு காணாமல் போன நிலையில் கால்வாயில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் இருவரை பிடித்து விசாரித்தபோது அந்த சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவர் உயிரிழந்துவிட்டதால் சாக்கு பையில் கட்டி கால்வாயில் வீசி சென்றதாக அந்த காமக்கொடூரர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பள்ளி கல்வி பயிலும் அந்த சிறுமியை ஈவிரக்கமின்றி கொலைசெய்த அந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Featured

To Top