Connect with us

யாழ்ப்பாணத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு: முக்கிய காட்சிகள்..

Featured

யாழ்ப்பாணத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு: முக்கிய காட்சிகள்..

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளார். இதன் பிறகு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், இந்தி திணிப்பு எதிர்ப்பை கதைக்களமாக கொண்டு உருவாகும் படமான பராசக்தி மிக முக்கியமானது.

இந்த படத்தில், நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ்நாட்டில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கவுள்ளது.

அடுத்த வாரம், படக்குழு இலங்கை செல்ல உள்ளது. அங்கு, யாழ்ப்பாணம் நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்மீக ஒளியில் மூழ்கிய சூப்பர் ஸ்டாரின் புதிய லுக்கை பாருங்க!

More in Featured

To Top