Connect with us

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரித்திமான் சாஹா..!!

Featured

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரித்திமான் சாஹா..!!

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த ரித்திமான் சாஹா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த IPL கிரிக்கெட் தொடரில் தனக்கென தனி இடத்தை பிடித்து பல கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் ரித்திமான் சாஹா.

ஹைதராபாத் அணியில் வெற்றிகரமான வீரராக இருந்து வந்த ரித்திமான் சாஹா கடந்த சில ஆண்டுகளாக குஜராத் அணியில் விளையாடி வந்தார் . இதையடுத்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்நாடு மற்றும் சர்வேதச போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாஹா அறிவித்துள்ளார்.

நடப்பு ரஞ்சி கோப்பை சீசன்தான் தன்னுடைய கடைசி தொடர் என அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க சாஹா பதிவு செய்யவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் ரித்திமான் சாஹா அவரின் அடுத்தகட்ட நகர்வுகளை வெற்றிகரமாக எடுத்துவைக்க பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ‘வா வாத்தியார்’ – கார்த்தி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! 🎬📺

More in Featured

To Top