Connect with us

வெற்றிநடை போடும் பெங்களூருக்கு அழுத்தம் கொடுக்குமா பஞ்சாப்..? – தரம்சாலாவில் இன்று பலப்பரீட்சை..!!

Featured

வெற்றிநடை போடும் பெங்களூருக்கு அழுத்தம் கொடுக்குமா பஞ்சாப்..? – தரம்சாலாவில் இன்று பலப்பரீட்சை..!!

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் உலக புகழ் பெற்ற தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 58 ஆவது லீக் போட்டியில் RCB – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள டியூபிலிசஸ் தலைமையிலான பெங்களூரு அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள சாம் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 8 ஆவது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் பிலே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அணைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால் இன்றைய போட்டி நிச்சயம் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தரம்சாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top