Connect with us

வலியும் வேதனையும் எனக்குத் தெரியும் – சிவகார்த்திகேயன் படத்துக்கு விட்டுக்கொடுக்க சொன்ன விஜய் ஆண்டனி விளக்கம்!

Featured

வலியும் வேதனையும் எனக்குத் தெரியும் – சிவகார்த்திகேயன் படத்துக்கு விட்டுக்கொடுக்க சொன்ன விஜய் ஆண்டனி விளக்கம்!

இசையமைப்பாளராக சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோவாகவே தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடித்துள்ள படம் மார்கன். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மையத்தில் நடந்தது. அப்போது பராசக்தி டைட்டில் பிரச்சனை பற்றி விஜய் ஆண்டனி பேசினார்.

அவர் கூறியதாவது: “பட டைட்டில் பிரச்சனை எனக்கு ஒருமுறைதான் வந்தது. சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்துக்காக நடந்தது. நான் பராசக்தி என்ற டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். ஆனால் அவர்களுக்கு அது தெரியாமல் டைட்டிலை அறிவித்துவிட்டார்கள்.

இதையெல்லாம் பார்த்த பிறகு, நட்பு காரணமாக நானே அந்த டைட்டிலை விட்டுக்கொடுத்தேன். தயாரிப்பாளரின் வேதனையை எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் இதை நேர்மையாக எடுத்துக்கொண்டேன்.” இது தொடர்பான விவகாரமே ஒரு பெரிய சர்ச்சையாய் மாறியிருந்தது. ஆனால் தற்போது அந்த விவகாரம் மங்கிவிட்டது. விஜய் ஆண்டனியின் மார்கன் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ்‌இல் வெடித்த முதல் வெடி! – திவாகர், கெமி இடையே கடும் வாக்குவாதம்!

More in Featured

To Top