Connect with us

மீண்டும் தள்ளிப்போகிறது சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு…? காரணம் இதுதான்

Suriya_Purananooru

Cinema News

மீண்டும் தள்ளிப்போகிறது சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு…? காரணம் இதுதான்

சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகும் சூர்யாவின் 43வது படமான புறநானூறு படத்தின் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பார் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்து படத்தில் பணியாற்ற உள்ள கலைஞர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. மேலும் இந்த பிரகாஷ் இசையமைக்க உள்ளார் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நடிப்பு முற்றிலும் வேறுபட்ட ஒரு டைமென்ஷனில் இருந்ததால், இந்த படமும் அப்படி இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், அறிவிப்பு வெளியாகி இத்தனை காலமாகியும் படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில், அயலான் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தின் வேலைகளும் தொடங்கியுள்ளது. அதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால், அந்த படத்தை முடித்துவிட்டுதான் புறநானூறு படத்தில் நடிப்பார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Cinema News

To Top