Connect with us

பா.ரஞ்சித் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு… அக்ஷய் குமாரின் மனிதநேய உதவி..

Featured

பா.ரஞ்சித் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு… அக்ஷய் குமாரின் மனிதநேய உதவி..

சில தினங்களுக்கு முன்னர், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் “வேட்டுவம்” படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்தார். ரிஸ்க்கான சண்டை காட்சியில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த துயரமான சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்துக்காக இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட நான்கு பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு பெரும் நல்லிணக்கமான நடவடிக்கையை எடுத்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் நடிகர்களுக்கு அவர் இன்சூரன்ஸ் (காப்பீடு) ஏற்பாடு செய்து வழங்கியுள்ளார். பா. ரஞ்சித் படத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது அவரை இந்த நடவடிக்கையை எடுக்க தூண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Featured

To Top