Connect with us

பள்ளி கல்லூரி மாணவிகளின் நலன் காக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு..!!

Featured

பள்ளி கல்லூரி மாணவிகளின் நலன் காக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு..!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளின் பயிற்சி நேர வகுப்புகளை மாலை நேரத்தில் விரைவாக முடிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் ரீதியான குற்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே . அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் பாலியல் ரீதியாதாக துன்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது உ.பி. அரசு அதிரடி உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.

அதன்படி உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளின் பயிற்சி நேர வகுப்புகளை மாலை நேரத்தில் விரைவாக முடிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்கள் மாலையில் தாமதமாக மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் குறிப்பிட்ட நேரத்தில் மாணவிகள் வீடு சேருவதை உறுதி செய்ய வேண்டும் என உ.பி. அரசு போட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை எடுப்பதாக உ.பி. அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top