Connect with us

படுதோல்வி பின்னர் பிரியங்கா மோகனின் அதிரடி முடிவு!

Featured

படுதோல்வி பின்னர் பிரியங்கா மோகனின் அதிரடி முடிவு!

பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான “சரிபோதா சனிவாரம்” படத்தில் மாபெரும் வெற்றியடைந்தார். ஆனால், தமிழில் வெளியான “பிரதர்” படம் படுதோல்வியடைந்தது.

இதற்கிடையில், தமிழில் கடைசியாக பிரியங்கா மோகன் நடித்த படம் தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக வெப் சீரிஸில் நடிக்க முடிவு செய்துள்ளார். “நித்தம் ஒரு வானம்” படத்தை இயக்கிய இயக்குநர் இரா. கார்த்திக் இயக்கத்தில் புதிய வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. இந்த வெப் சீரிஸ், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது.

பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு தற்போது கொரியாவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த வெப் சீரிஸில் வேறு யாரென்னும் விவரங்கள் தற்போது வெளிவரவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top