Connect with us

யாரு சாமி நீங்க : அரை நூற்றாண்டாக தண்ணீர் மட்டுமே குடித்து உயிர்வாழும் வினோத மூதாட்டி..!!

Featured

யாரு சாமி நீங்க : அரை நூற்றாண்டாக தண்ணீர் மட்டுமே குடித்து உயிர்வாழும் வினோத மூதாட்டி..!!

அரை நூற்றாண்டாக வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வரும் வினோத மூதாட்டியின் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வியட்நாமை சேர்ந்த புய் தி லொய் என்ற 75 வயது மூதாட்டி 1963ம் ஆண்டில் இவரை மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது . மின்னல் தாக்கியதில் எப்படியோ பிழைத்து கொண்ட இவருக்கு வேறு ஒரு புதிய பழக்கம் தொற்றிக்கொண்டது .

மின்னல் தகையத்தில் இருந்து , உணவு உண்ணும் பழக்கத்தை அவர் சுத்தமாக கைவிட்டுள்ளாராம் . உணவின் வாசனையே அவருக்கு குமட்டலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள அவர் அன்று முதல் இன்று வரை தன்னுடைய குடும்பத்தினருக்கு உணவு சமைத்தாலும், அதனை ருசி பார்ப்பதில்லை என்றும் கடந்த 50 வருடங்களாக வெறும் தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே தான் குடித்து உயிர் வாழ்ந்து வருவதாக சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக வெறும் நீர் ஆகாரங்களை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வரும் இந்த வினோத மூதாட்டி சொன்ன அதிர்ச்சி தகவல் பெரும் ஆச்சிரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top