Connect with us

RR பந்துகளை தெறிக்கவிட்ட நிதிஷ் – ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு..!!!

Featured

RR பந்துகளை தெறிக்கவிட்ட நிதிஷ் – ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு..!!!

கிளுகிளுப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் SRH – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சஞ்சுவின் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் .

அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அதிரடி ஆட்டக்காரர் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இருவரும் தங்களது ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய நிலையில் அபிஷேக் 12 ரன்களில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய அமோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் வெளியேற மறுபக்கம் ஹெட் அதிரடியில் மிரட்டி வந்தார். இதையடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி ஹெட் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்த 58 ரன்களில் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இல்லாத SRH அணி 201 ரன்களை குவித்தது . இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  PBKS VS RR : பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு..!!

More in Featured

To Top