Connect with us

மாரி செல்வராஜின் அதிரடி திருப்பம்: காதல் படம் இயக்க இருக்கிறார்!

Featured

மாரி செல்வராஜின் அதிரடி திருப்பம்: காதல் படம் இயக்க இருக்கிறார்!

மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் இயக்கிய “பரியேறும் பெருமாள்” படம் பெரிய வரவேற்பைப் பெற்றது, மேலும் அதனைத் தொடர்ந்து “கர்ணன்” மற்றும் “மாமன்னன்” போன்ற படங்களையும் இயக்கி அதன் வெற்றியைத் தொடர்ந்தார். சமீபத்தில் அவர் “வாழை” என்ற படத்தையும் இயக்கி, அதற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தற்போது, துருவ் விக்ரம் நடிப்பில் “பைசன்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஒரு பேட்டியில், மாரி செல்வராஜ் “விண்ணைத்தாண்டி வருவாயா” போன்ற காதல் சார்ந்த படத்தை இயக்க விருப்பம் இருக்கின்றார் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “என்னிடம் தற்போது காமெடி அல்லது மற்ற வகைகளில் படம் எடுக்க எந்த கதையும் இல்லை. எனினும், என் மனைவி என்னிடம் காதல் சார்ந்த ஒரு படம் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அது சமூகவியல் அல்லது சமூக அர்ப்பணிப்பு இல்லாமல், முழுக்க முழுக்க காதல் சார்ந்த படம் ஆக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top