Connect with us

கரப்பான்பூச்சியால் வீட்டை கொளுத்திய நபர் – ஜப்பானில் நடந்த திக் திக் சம்பவம்..!!

Featured

கரப்பான்பூச்சியால் வீட்டை கொளுத்திய நபர் – ஜப்பானில் நடந்த திக் திக் சம்பவம்..!!

ஜப்பானில் கரப்பான்பூச்சி தொல்லை தாங்க முடியாமல் ஒரு நபர் வீட்டையே கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மூட்ட பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்தினான் ஆண்டி என்ற பழமொழிக்கேற்ப ஜப்பான் நாட்டில் ஒரு நபர் கரப்பான்பூச்சியால் வீட்டை கொளுத்தி உள்ளார்.

ஜப்பான் நாட்டில் குமாமோட்டோவின் சுவோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 54 வயது நிறைந்த நபர் ஒருவர் கரப்பான்பூச்சியை கொல்வதற்காக அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி ஸ்பிரே பயன்படுத்தி உள்ளார் . மூச்சை அடைக்கும் அளவுக்கு ஸ்பிரே அடித்ததால் வீடு முழுவதும் பரவி ஒரு கட்டத்தில் வீட்டில் தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் அந்த நபருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

வீடு தீப்பற்றியுள்ளதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் பற்றிய தீயை அனைத்து காயமடைந்த அந்த நபரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்குள் புகுந்த கரப்பான்பூச்சியை கொல்ல முயன்றபோது, தவறுதலாக வீட்டையே கொளுத்திய 54 வயதான நபரால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Featured

To Top