Connect with us

பணிப்பெண் சித்ரவதை – திமுக எம்எல்ஏ மகனை பிடிக்க தனிப்படை அமைப்பு..!!

Featured

பணிப்பெண் சித்ரவதை – திமுக எம்எல்ஏ மகனை பிடிக்க தனிப்படை அமைப்பு..!!

வீட்டு வேலைக்காக வந்த பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமை போல நடத்தி, அவரை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதவதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை .

இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாத வகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

அந்த இளம் பெண்ணை தினந்தோறும் துன்புறுத்தி வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

எளிய மனிதர்கள் மீது தொடுக்கப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும் என பலரும் ஆவேசமாக கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டு வேலைக்காக வந்த பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

More in Featured

To Top