Connect with us

மக்களவைத் தேர்தல் 2024 : அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு கையெழுத்தானது..!!

Featured

மக்களவைத் தேர்தல் 2024 : அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு கையெழுத்தானது..!!

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது .

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு ,மனு தாக்கல் செய்யும் பணி இன்று துவங்கி உள்ளது .

இதனை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றன .

அந்த வகையில், திமுக , அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இன்று தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில் சொன்னது சொன்னபடி இரு கட்சிகளுமே தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது .

சென்னை ராயப்பேட்டியில் உள்ள அதிமுக கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

இதையடுத்து அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது . இந்த கூட்டணியில் தேமுதிக-விற்கு மத்திய சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :

2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும் . அதிமுகவுடன் கூட்டணி என்பது ஒரு ராசியான கூட்டணி எண்ணிக்கை என்பது முக்கியமில்லை; யார் யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுதான் செல்லம்மா திட்றதா : ‘கண்டனம்’ என்ற வார்த்தை இன்றி பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த EPS..!!!

More in Featured

To Top