Connect with us

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!!

Featured

ஆப்கனுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மல்லுக்கட்ட உள்ளது.

இதில் இந்த இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் 11ஆம் தேதி மொகாலியிலும், இரண்டாவது போட்டி 14ஆம் தேதி இந்தூரிலும், கடைசி போட்டி 17ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாட போகும் இரு அணிகளின் வீரர்கள் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் BCCI அறிவித்தது.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் HitMan Rohit ரோஹித் ஷர்மா (C), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுகின்றனர்.

இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு உலக புகழ் பெற்ற மொஹாலியில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது .

இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த தொடருக்கு தயாராக இந்த தொடர் மிகவும் உதவும் எனபதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பை மண்ணில் பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top