Connect with us

பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் – அமைச்சர் மனோ தங்கராஜ் ஷாக்கிங் தகவல்

Featured

பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம் – அமைச்சர் மனோ தங்கராஜ் ஷாக்கிங் தகவல்

பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

கலவரங்கள் வரும்போது இணைய சேவையை முடக்குகிறீர்கள், விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சனைகள் வரும்போது சமூக வலைதளங்களையும், பத்திரிக்கைகளையும் கட்டுப்படுத்துகிறீர்கள், தேர்தல் வரும்போது X-தள கணக்குகளையும் முடக்க முயற்சிக்கிறீர்கள்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் பொய் செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதில் பாஜகவின் பங்கு என்ன என்பது ஊருக்கே வெளிச்சம். பாஜகவினரை கட்டுப்படுத்தாமல் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பது மீண்டும் ஜனநாயகத்தை நசுக்கும் நடவடிக்கையே என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கைகொடுக்காத சாஞ்சு சாம்சனின் அதிரடி - டெல்லியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான்..!!

More in Featured

To Top