Connect with us

கனமழை எதிரொலி : தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொதுவிடுமுறை..!!

Featured

கனமழை எதிரொலி : தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொதுவிடுமுறை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு ,தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடுத்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் கல்லூரிகள். தனியார் நிறுவனங்கள் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை 20:12.2023 (புதன்
கிழமை) ஒரு நாள் மட்டும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) வேலை நாளாக அனுசரிக்கப்படும். அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறையான வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு, உள்ளாட்சி துறை. பால், குடிதண்ணீர். எரிபொருள் உணவக பணியாளர்கள் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உள்ளுர் விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top