Connect with us

பெங்களூரு பந்துகளை கிழித்தெடுத்த தமிழர்கள் சாய் – ஷாருக் – RCB அணிக்கு 201 ரன்கள் இலக்கு..!!!

Featured

பெங்களூரு பந்துகளை கிழித்தெடுத்த தமிழர்கள் சாய் – ஷாருக் – RCB அணிக்கு 201 ரன்கள் இலக்கு..!!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி பெங்களூரு அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் RCB – GT அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி பேட்டிங் செய்தது.

அணியின்தொடக்க வீரர்களாக வழக்கம் போல் சாகா மற்றும் கேப்டன் கில் களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்தாக களம் கண்ட தமிழகர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆரம்பம் முதல் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்த எதிரணியை மிரட்டி வந்த ஷாருக்கான் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதி வரை தனது அதிரடியை தொடர்ந்து சாய் சுதர்சன் 84 ரன்களில் கெத்தாக இருந்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 200 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

More in Featured

To Top