Connect with us

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள்..!!

Featured

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது ஏராளமான வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

தமிழ்நாட்டில் இருக்கும் மிகவும் பிரபலமான சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் கடைசி வாரத்தில் ஆஸ்திரேலியா, சைபிரியா,பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான பறவை இனங்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேரும்.

சொந்த நாடுகளில் இருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பல வகையான பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் மே , ஜூன் மாதங்களில் தங்கள் நாட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளது .

தமிழகத்தில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் ஏரிகள் குளங்கள் என அனைத்தும் வேகமாக நிரம்பி வருள்கின்றன . இந்நிலையில் தமிழ்நாட்டில் இது குளிர் காலம் என்பதாலும் இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து தற்போது ஆயிரக்கணக்கான பறவைகள் சரணலாயத்திற்கு கூட்டம் கூட்டமாக குவிந்து வருகிறது.பறவைகள் வருவதையும் அங்கு சில காலம் கூட்டம் கூட்டமாக வாழ்வதையும் பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

More in Featured

To Top