Connect with us

‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!!

Cinema News

‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!!

திரையரங்குகளில் தற்போது வசூல் வேட்டை செய்துகொண்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் , சித்தார்த் ,மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது . புத்தம் புதிய கதை களத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் பிரமிக்க வைக்கும் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்திற்கு எவ்ளோ வரவேற்பு கிடைத்ததோ அதை விட பல மடங்கு அதிகமாக இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு மொத்தமும் சந்தோச பெருவெள்ளத்தில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று பிரபல தனியார் ஹோட்டலில் சிம்பிளாக நடைபெற்றுள்ளது . அத்துடன் இப்படத்தின் வெற்றியையும் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி..!!

More in Cinema News

To Top