Connect with us

அதிமுகவின் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

Featured

அதிமுகவின் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிமுகவின் தேர்தல் பரப்புரையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று சூளுரை எடுத்து மக்கள் நலன் காக்கவே தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தாய், இதயதெய்வம் அம்மா அவர்களின் 76ஆவது பிறந்தநாளில் கழகத் தலைமைக் கழகத்தில் அமைந்துள்ள

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை முழக்கத்தினை வெளியிட்டேன்.

அதிமுகவின் தேர்தல் முழக்கம் :

“தமிழர் உரிமை மீட்போம்!
தமிழ்நாடு காப்போம்!!”

இன்றைக்கு இந்திய நாடு இருக்கின்ற சூழலில், மாநில உரிமைகள் குறித்து மக்களவையில் உரத்த குரலில் முழங்கி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் இருந்து கழகத்தின் சார்பிலும், கழக கூட்டணி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள், தமிழ்நாடு மக்களின் ஒருமித்த கொள்கைக் கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு

#தமிழர்உரிமைமீட்ட_அம்மா அவர்களின் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தர அயராது பாடுபடுவோம் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் அரண்மனை 4 - இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Featured

To Top