Connect with us

தேர்தலுக்காக பச்சையாக நடிக்கும் எடப்பாடி பழனிசாமி – மாதவரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Featured

தேர்தலுக்காக பச்சையாக நடிக்கும் எடப்பாடி பழனிசாமி – மாதவரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி பச்சையாக நடித்து வருவதாக தமிழக முதல்வர் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாதவரத்தில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது :

தமிழகத்தின் நுழைவு வாயிலான தொண்டை மண்டலத்திற்கு வந்துள்ளேன் . திமுகவுக்கும் வட சென்னைக்குமான உறவு, தாய்க்கும் சேய்க்குமான உறவு.

இது மிக முக்கியமான தேர்தல்; இந்தியாவில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் பாஜகவும் பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு

மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம்; சென்னையில் 3ஆவது ரயில் முனையம், பழவேற்காடு – கடப்பாக்கம் வரை மேம்பாலம் அமைக்கப்படும்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக பச்சையாக நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி; சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது அதிமுக அரசு தான் .

வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், திருவள்ளுவர் சிலைகளுக்கு காவிச்சாயம் பூசிய பாஜக-வை எதிர்க்காதவர் ஈபிஎஸ் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

More in Featured

To Top