Connect with us

Iran : ஈரானில் இரட்டை குண்டு வெடிப்பு..!!

Iran

Featured

Iran : ஈரானில் இரட்டை குண்டு வெடிப்பு..!!

ஈரானில் கெர்மான் என்ற இடத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய கோர தாக்குதலில் ஈரான் ( Iran ) நாட்டின் ஜெனரல் காசிம் சுலைமான் கொடூரமாக கொல்லப்பட்டார் . இதற்கு பல தரப்பில் இருந்து அமெரிக்காவுக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளை கலவையாக வந்த நிலையில் இரான் நாட்டு மக்களும் ஜெனரலின் சாவுக்கு பச்சைக்கொடி மற்றும் சிகப்பு கோடி காட்டி வந்தனர் .

இந்நிலையில் ஜெனரல் காசிம் சுலைமானின் நினைவு நாளான இன்று மீண்டும் ஒரு கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது .

அவரது நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஈரான் ( Iran ) நாட்டின் கெர்மான் என்ற இடத்தில் ஷாஹில் அல் ஜமான் என்ற மசூதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் ஜெனரல் காசிம் சுலைமானுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த நிலையில் அவரது கல்லறை அருகே பயங்கர சத்தத்துடுன் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதேபோல் மீண்டும் ஒரு முறை குண்டு வெடித்துள்ளது.

Also Read : https://www.cinemamedai.com/gv-prakash-kumar-starred-rebel-movie-is-censored-as-ua-by-censor-board/

அஞ்சலி செலுத்த மக்கள் ஒன்றாக கூடி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 73 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இந்த நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி படுகாயமடைந்து நூறுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.இதன்காரணமாக அந்நாட்டில் அவசர நிலை கொண்டுவரப்பட்டு ஏரளாமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு மட்டும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஜென்ரேல் சுலைமானுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் இரட்டை குண்டுவெடுப்பால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொருட்பேர்க்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Featured

To Top