Connect with us

கொலை சம்பவங்களில் சிக்கி பதுங்கி இருந்த குற்றவாளிகள் – சுட்டு பிடித்த தமிழக காவல் துறை

Featured

கொலை சம்பவங்களில் சிக்கி பதுங்கி இருந்த குற்றவாளிகள் – சுட்டு பிடித்த தமிழக காவல் துறை

சிவகங்கை: தேவக்கோட்டை அருகே பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பதுங்கி இருந்த குற்றவாளிகளை தமிழக காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்தவன் தான் தினேஷ் குமார்.

இவன் மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகள் இருந்த நிலையில் இவனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தினேஷ் தனது கூட்டாளிகளுடன் தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளனர் ஒரு கட்டத்தில் சிவகங்கை அருகே தினேஷ் பதுங்கி இருப்பதாக போலீசார் ரகசிய தகவல் கிடைக்க.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பதுங்கி இருந்த தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது ஆயுதங்களால் போலீசாரை தினேஷ் தாக்கியுள்ளார் .

இதையடுத்து தினேஷ் குமாரை, முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்ட போலீசார் அவனை கைது செய்து தற்போது சிகிச்சைக்காக மருவத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Featured

To Top