Connect with us

இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் கொரோனா நோய் தொற்று – பெருமூச்சு விடும் நாட்டு மக்கள்

Featured

இந்தியாவில் மெல்ல மெல்ல குறையும் கொரோனா நோய் தொற்று – பெருமூச்சு விடும் நாட்டு மக்கள்

இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வரும் கொரோனா நோய் தொற்றால் நாட்டு மக்களின் பற்றம் குறைந்து பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோன நோய் தொற்று அதிகளவில் பரவி வந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும் பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .

இதன் காரணமாக மக்கள் அனைவரும் மீண்டும் கொரோனாவா என பீதியில் இருந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது . நேற்று முன்தினம் 841 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, நேற்று 636 ஆக சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் வாணவேடிக்கை நடத்திய கொல்கத்தா அணி - பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top