Connect with us

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா நோய் தொற்று – இன்று மட்டும் எத்தனை பெருகும் கொரோனா வந்துருக்கு தெரியுமா..?

Featured

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா நோய் தொற்று – இன்று மட்டும் எத்தனை பெருகும் கொரோனா வந்துருக்கு தெரியுமா..?

உலக மக்கள் அனைவரையும் கடந்த சில வருடங்களாக வாட்டிவதைத்து வந்த கொரோனா பெருந்தொற்று சீனாவில் இருந்து முதன் முதலில் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.அங்கு தொடங்கிய அந்த தொற்று படிப்படியாக பரவி கோடான கோடி மக்களை வேட்டையாடியது.

உலக நாடுகளை நடுங்கவைத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்காமல் அங்கேயும் தலைவிரித்தாடியது இங்கும் பல உயிர்களை கொன்று குவித்த இந்த பெருந்தொற்று இந்த வருடம் சற்று பம்மி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலை காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹைதராபாத்தில் இன்று அசத்தப்போவது யார்..? SRH - RR இன்று பலப்பரீட்சை..!!

More in Featured

To Top