Connect with us

இந்த வயதில் இவ்ளோ கோபம் ஆகாது தம்பி : 4ம் வகுப்பு சண்டையில் சக மாணவர்கள் மீது 108 முறை காம்பஸ் குத்து..!!

Featured

இந்த வயதில் இவ்ளோ கோபம் ஆகாது தம்பி : 4ம் வகுப்பு சண்டையில் சக மாணவர்கள் மீது 108 முறை காம்பஸ் குத்து..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பில் சண்டையின் போது, சக மாணவர்கள் மூவரை காம்பஸ் கொண்டு 108 முறை குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரப்ரபையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவன் சண்டையின் போது, சக மாணவர்கள் மூவரை காம்பஸ் கொண்டு 108 முறை குத்தியுள்ளான் . இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர் .

ஆசிரியர் வந்து பார்த்தபோது அந்த 3 மாணவர்களும் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்திருந்தனர் இதையடுத்து உடனே அந்த 3 மாணவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தற்போது அவர்களுக்கு சிகிச்சை அழைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதையடுத்து காம்பஸ் கொண்டு கொலைவெறியுடன் குத்திய அந்த மாணவனை பிடித்து ஆசிரியர்களும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . காம்பஸ் கொண்டு இத்தனை முறை குத்தும் அளவுக்கு அந்த மாணவர்களுக்குள் என்ன சண்டை நடந்திருக்கும் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு குழுமம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அந்த மாணவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் கொடுக்கவும் இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Featured

To Top