Connect with us

தாய் மண்ணில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு – கொல்கத்தாவின் இலக்கு என்னவாக இருக்கும்..?

Featured

தாய் மண்ணில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு – கொல்கத்தாவின் இலக்கு என்னவாக இருக்கும்..?

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் உலக புகழ் பெற்ற சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் CSK – KKR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் KKR அணிக்கு எதிராக டாஸ் வென்ற CSK அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டியில் வெற்றி 2 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆம் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆம் இடத்தில் கெத்தாக உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top